வீட்டில் இந்த செடி வளர்த்தால் பணம் வந்து சேரும்

தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்களை வைத்தால், கடன் பிரச்சனைகள் தீருவதுடன், செல்வம் வந்து சேரும் என்றும் கூறுகிறார்கள். வடக்கு திசையில் மட்டும் இந்த செடியை வைக்கக் கூடாதாம். பணத்தை அதிகரிக்கும் மங்களகரமான செடியாக மல்லிகை செடியையும் கருதுகிறார்கள். வாஸ்துப்படி, வீட்டு வாசலில் மல்லிகை செடியை வைத்து வளர்ப்பது மிகவும் நன்மைதரக் கூடியதாம். சங்கு பூ செடியை வளர்த்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை பெருகுமாம். கருப்பு அல்லது வைலட் கலர் ஊமத்தை செடியையும் வீடுகளில் வளர்க்கலாம். இதனால், பண வரவு கிடைப்பதுடன், பித்ரு தோஷங்களிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி