அதிமுகவுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு மட்டுமே பண வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு ஆத்தூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. அவர்கள் 25 பைசா கொடுக்கிறார்களா? நீங்க 50 பைசா கொடுங்கள் என பேசினார். அதேபோல் அதிமுக நிர்வாகிகள் தங்களது பூத் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே வாக்கு சேகரிக்க வேண்டும். வெளியில் சென்று ஒன்றும் கிழிக்க வேண்டாம் என பேசினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.