மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளருக்கு செல்வப் பெருந்தகை வாழ்த்து

58பார்த்தது
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளருக்கு செல்வப் பெருந்தகை வாழ்த்து
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சுதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வெறுப்பரசியல், மாநில உரிமைகள் பறிப்பு, அரசியல் பழிவாங்கல், சிறுபான்மையினர் மனங்களில் அச்சத்தை விதைத்தல், உணவு அரசியல், நவீனத் தீண்டாமை, மொழி ஆதிக்கம் உள்ளிட்டவற்றைத் தீவிரப்படுத்தி வரும் பாசிச பா.ஜ.க.வை நாட்டை விட்டு அப்புறப்படுத்தி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல ‘இந்தியா கூட்டணி’க்கு வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி