மதிமுக எம்.பி கணேசமூர்த்தி கவலைக்கிடம்!

89785பார்த்தது
மதிமுக எம்.பி கணேசமூர்த்தி கவலைக்கிடம்!
மன அழுத்தத்தில் இருந்த நிலையில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. திமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுக தொடங்கிய நாளில் இருந்து அவருக்கு பக்க பலமாக இருந்த கணேசமூர்த்தி, 3 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவருக்கு தற்போது விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து 48 மணி நேரத்திற்கு பிறகே கூற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி