தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தன் மீதான விசாரணைக்கு தடை கோரி தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன் தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணம் எடுத்துச் செல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.