திருப்பூர் வளையங்காட்டைச் சேர்ந்தவர் பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முருகேசன். இவரது இடத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் பனியன் கம்பனி நடத்தி வருகிறார். வேலை இல்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி
ஒரு மாதமாக வாடகை தரவில்லை என தெரிகிறது. இதனால், சுந்தரமூர்த்திக்குத் தெரியாமல் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த 30 தையல் இயந்திரங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் இன்று (மே 24) முருகேசன் கைது செய்யப்பட்டார்.