முதியவர் மீது இரண்டு முறை ஏறிய கார் (வீடியோ)

15304பார்த்தது
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் கடந்த 17ஆம் தேதி முதியவர் மீது சொகுசு கார் ஏறிய விபத்து சம்பவத்தின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. காரை ஓட்டிவந்த நபர் இரண்டு முறை முதியவர் மீது ஏற்றி, சில மீட்டர்கள் இழுத்து சென்றுள்ளார். அப்போதும் விபத்தை பற்றி ஓட்டுநர் கண்டுகொள்ளவில்லை. பின்னர் அங்கு வந்த நபர் காரை நிறுத்த சொல்லிய பிறகு முதியவர் அங்கிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டார். காரை ஓட்டியவர் தலைமறைவாகியுள்ளதாகவும், காவல்துறை அவரை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி