நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை என அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் மூன்று பேருக்கு தலா 500 ரூபாய் அபராதத்தை போலீசார் விதித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.