தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்

74பார்த்தது
தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் இன்று (மே 24) முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை மழை பெய்து வரும் நிலையில் இந்த செய்தி மக்களை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி