எனவே மேற்குறிப்பிட்ட ஏலா பகுதியில் தேவையான முறையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வடிகால் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிள்ளியூர் மேற்கு வட்டார குழு சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நேற்று (16-ம் தேதி) மாலையில் நடைபெற்றது. புதுக்கடை அருகே, வெள்ளையம்பலம் ஜங்சனில் நடந்த இப்போராட்டத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் வில்சன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தை விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் துவக்கி வைத்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவி, ஜான், செல்லநாடார், கிறிஸ்தவ மேரி, ஜஸ்டின், ஜவஹர் உட்பட பலர் பேசினர். முடிவில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி முடித்து வைத்தார். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.