கன்னியாகுமரியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

84பார்த்தது
கன்னியாகுமரியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
கன்னியாகுமரி அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 48), மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ரெஜி (43). இவர்களுக்கு ராகுல், டெனில் மற்றும் வினு என்ற 3 மகன்கள் உள்ளனர். சமீப காலமாக ரெஜி நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் மிகுந்த மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் விஜயன் மற்றும் அவரது மகன்கள் கடல் தொழிலுக்கு சென்றுவிட்டனர். இதனால் ரெஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் வேலை முடிந்து 3 பேரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரெஜி மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து விஜயன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி