இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு அறிவிப்பு

நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை போட்டி முடிவடைந்ததையடுத்து முதல் ஆளாக விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது டி20 போட்டி ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளியே வருவதற்குள், இன்று (ஜூன் 30) இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டி20 போட்டியில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பையை வென்று எனது கனவு நிறைவேறிய நிலையில் ஓய்வு பெறுகிறேன். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன். தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி