டிராக்டரில் சிக்கிய 8 வயது சிறுவன்.. தந்தை கண் முன் பலி

66பார்த்தது
டிராக்டரில் சிக்கிய 8 வயது சிறுவன்.. தந்தை கண் முன் பலி
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வரும் தாமோதரன்-கவிதா தம்பதி. இந்நிலையில் இன்று (ஜூன் 30) தனது சொந்த நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக டிராக்டர் கொண்டு உழுவதற்காக தமோதிரன் சென்றுள்ளார். உடன் அவரது இளைய மகன் பரத்குமார் (8) சென்றுள்ளார். அப்போது ஆதிகேசவன் என்பவர் டிராக்டரை கொண்டு உழுதுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பரத்குமார் பின்வழியாக உழவு இயந்திரத்தின் மீது ஏறியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழ விழுந்ததில் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கி தனது தந்தை கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி