சரக்கில் 'கிக்’ இல்லை - துரைமுருகன் பேச்சிக்கு எல்.முருகன் கண்டனம்

50பார்த்தது
சட்டசபையில் நேற்று பேசிய அமைச்சர் துரைமுருகன், “டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லாத காரணத்தினால் மக்கள் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்” என பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “திமுகவினர் பொதுமக்களை கேலி செய்து வருகின்றனர். மக்களை நல்வழிப்படுத்த வேண்டும், மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டும், நல்ல கல்வி மற்றும் நல்ல மருத்துவமனைகளை கொடுக்க வேண்டும். இப்படி கவனம் எல்லாம் வளர்ச்சியில் இருக்க வேண்டுமே தவிர கவனம் மதுவில் இருக்க கூடாது” என விமர்சித்தார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி