சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஜெகதீஷ் குமார். தனது குடும்பத்துடன் ஷெனாய் நகரில் இருக்கும் பிரபல பிரியாணி உணவகமான புகாரி ஹோட்டலில் Zomato மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். உணவைப் பிரித்து பார்த்தபோது வெங்காய ரைத்தாவில் புழு ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகதீஷ் குமார், ஹோட்டலை தொடர்பு கொண்டு கேட்டபோது தவறு நடந்து விட்டதாகவும், வேறு உணவை மாற்றி கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.