குறுக்கே வந்த நாயால் பைக் விபத்து.. புதுமணப் பெண் பலி

55பார்த்தது
குறுக்கே வந்த நாயால் பைக் விபத்து.. புதுமணப் பெண் பலி
கர்நாடகா உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகாவைச் சேர்ந்த நீக்ஷா என்பவருக்கும் விஷால் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நீக்ஷா தனது கணவருடன் ஹோஸ்மாரு பாலத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. அதை தவிர்க்கும் முயற்சியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த நீக்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் விஷால் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி