நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக உரையாற்றி அவர், "அண்மையில் புதிதாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு நகராட்சிகள் இன்னும் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். சென்னை மாநகர வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" என கூறியுள்ளார்.