உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? - எச்.ராஜா பரபரப்பு பேட்டி

59பார்த்தது
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு யார் காரணம் என வீடு, வீடாக சென்று மக்களிடம் கூறுவோம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை கொல்வதற்காகத்தான் திமுக 40 தொகுதிகளில் வென்றது, கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தான் தமிழகத்தில் கள்ளச்சாராயம் வந்தது, கள்ளச்சாராய உயிரிழப்புக்கு யார் காரணம் என பாஜக மக்களிடம் எடுத்துக் கூறுவதற்காக போராட்டம் நடத்துகிறது. பாஜகவின் போராட்டத்தை ஒடுக்கினால் வீடு வீடாகச் சென்று கள்ளச்சாராயம் மரணம் குறித்து கூறுவோம். கள்ளச்சாராய் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி, ஒளிந்து கொண்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து திமுக அரசு அகற்றப்பட வேண்டும், கனிமொழி கூறியது போல தமிழகத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என கூறினார்.