2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

73பார்த்தது
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் (ஜூன் 22) இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்தி