முதலமைச்சராக இன்று பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சராக இன்று (ஜூன் 12) சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கிறார். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கேசரபள்ளி ஐ.டி. பூங்கா அருகே இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். 175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

தொடர்புடைய செய்தி