சிறுவனுக்கு பாலியல் தொல்லை - இளம்பெண் போக்சோவில் கைது

10874பார்த்தது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை - இளம்பெண் போக்சோவில் கைது
தேனி மாவட்டம் போடி அருகே இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு, முனீஸ்வரி (28) என்பவர் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், 10 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அங்கிருந்த ஊழியர் விசாரித்தபோது, காப்பக நிர்வாகி முனீஸ்வரி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் கூறினான். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், முனீஸ்வரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி