பாம்பு கறி சமைத்து சாப்பிட்டவர் கைது

61பார்த்தது
பாம்பு கறி சமைத்து சாப்பிட்டவர் கைது
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சாரை பாம்பின் தோலை உரிப்பது போன்ற வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் ராஜேஷ்குமாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாரை பாம்பினை அவர் சமைத்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, வேறு ஏதேனும் விலங்குகளை அவர் வேட்டையாடி உள்ளாரா? என்பது குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.