ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஹிராநகர் செக்டாரில் உள்ள கதுவாவின் சைதா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் உஷார்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் அந்த கிராமத்துக்குச் சென்று ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். கத்துவா எஸ்.பி., அனயத் அலி சவுத்ரி என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்தார்.