விமானங்களில் ஏன் தமிழில் அறிவிக்க கூடாது? - நீதிமன்றம் கேள்வி

74பார்த்தது
விமானங்களில் ஏன் தமிழில் அறிவிக்க கூடாது? - நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆவணப்படுத்தவும், தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், “தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது?'. இது தொடர்பாக மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி