உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலின் பேரில் ஹர்சந்த்பூர் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தலைமறைவான கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.