செல்பி எடுக்க அண்ணாமலையை சூழ்ந்த தொண்டர்கள்

55பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்றார். அப்போது அங்கு இருந்த தொண்டர்கள், இளைஞர்கள் அனைவரும் அண்ணாமலையை சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அண்ணாமலையை நெருங்கிச் சென்றனர். பின்னர், நடந்துகொண்டே அனைவருக்கும் செல்பிக்கு போஸ் கொடுத்துவிட்டு அண்ணாமலை நேராக மணமேடை நோக்கிச் சென்றார். அங்கேயும் அவரை சூழ்ந்த மக்கள் செல்பி எடுக்க முண்டியடித்தனர். பின்னர், மணமக்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி