அமித்ஷா என்ன சொன்னார்? - தமிழிசை விளக்கம்

7826பார்த்தது
அமித்ஷா என்ன சொன்னார்? - தமிழிசை விளக்கம்
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுயின் பதவியேற்பு விழா 12ஆம் தேதி நடைபெற்றது. அந்த மேடையில் அண்ணாமலை, தமிழிசை இடையேயான உட்கட்சி பூசல் தொடர்பாக அமித்ஷா கண்டித்ததாகத் தகவல் வெளியானது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழிசை கூறியதாவது, “நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சந்தித்த சவால்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். தொகுதியில் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்” என்றார்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசை, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில், அவர் மீது தொடர் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி