வழிப்பறி.. சிங்கிள் ஆளாக திருடனை மடக்கிய போலீஸ்

80பார்த்தது
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே முதியவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஸ்கூட்டியில் தப்பி ஓடிய திருடனை இரண்டே நிமிடத்தில் போலீஸ் ஒருவர் விரட்டி பிடித்துள்ளார். தொடர்ந்து, ஒரே ஆளாக அந்த திருடனை மடக்கி நடுரோட்டில் வைத்து விசாரித்தார். அப்போது, அந்த திருடன் கோயம்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பதும் கஞ்சா போதையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, அங்கு வந்த மற்ற போலிசார் திருடனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி