இந்நிலையில் இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்காத விடியா அரசை கண்டித்து செந்துறை சாலையில் காலிக் குடங்களோடு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக ஜெயங்கொண்டம்-செந்துறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.