கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி விஷச்சாராய இறப்பு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. சில மணி நேரத்திற்கு முன்பு இறப்பு எண்ணிக்கை 50ஆக இருந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அதே மருத்துவமனையில் 31 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.