கள்ளக்குறிச்சி விவகாரம்: 25ஆம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரம்: 25ஆம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தை கண்டித்து வரும் 25ஆம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேமுதிகவினர் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் இதுவரை 52 பேர் விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி