உயிரோடு எரிக்கப்பட்ட நபர் (வீடியோ)

61பார்த்தது
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மத்யான் பகுதியில் வியாழக்கிழமையன்று (ஜூன் 20) ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபின் சியால்கோட்டைச் சேர்ந்த ஒருவர் குர்ஆனின் சில பக்கங்களை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆத்திரமடைந்த ஒரு கும்பல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அந்த நபரை இழுத்துச்சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததால் அந்த நபர் உயிரிழந்தார். தற்போது அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி