கள்ளக்குறிச்சி சிபிஐ விசாரணை வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு

57பார்த்தது
கள்ளக்குறிச்சி சிபிஐ விசாரணை வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதிகளில் அரசியல் அதிகாரம் பெற்றவர்களின் துணையோடு கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாக செய்திகள் வெளியாகின்றன என தெரிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக கடந்த ஓராண்டில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வியெழுப்பியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 47 பேர் உயிரிழந்ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கை வருகிற 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.