கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வர் பதிலுரை

65பார்த்தது
கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வர் பதிலுரை
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் உயிரிழப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். சட்டப்பேரவையில் அவர், “இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 66 பேர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி