சபாநாயகரின் கேள்வியும்.. அமைச்சர் துரைமுருகனின் ரியாக்‌ஷனும்..

64பார்த்தது
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சின் இடையே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், திசையன்விளை தாலுக்காவில் கீழமை நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிட்டீர்கள், அந்த வேலைகள் எப்போது தொடங்கப்படும்?" என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன், "கேள்வி நேரத்தில் சபாநாயகரே கேள்வி கேட்கும் புதுமையை சட்டப்பேரவையில் இன்றுதான் நான் பார்த்தேன்" என நகைச்சுவையாக கூறினார். அதற்கு சபாநாயகர், "என்னையும் தொகுதி மக்கள் வாக்களித்து தான் தேர்ந்தெடுக்கிறார்கள், தொகுதிக்காக நான் கேட்க வேண்டும்" என பதிலுரைத்தார்.

நன்றி: சன் நியூஸ்