டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மதுபான ஊழல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. இன்று சிறையில் இருந்து வெளியாக இருந்த நிலையில், அமலாகத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.