கள்ளச்சாராயம் குடித்த தம்பதி பலி

65பார்த்தது
கள்ளச்சாராயம் குடித்த தம்பதி பலி
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த தம்பதியான சுரேஷ் (40), வடிவுக்கரசி (32) ஆகியோர் விஷ சாராயம் குடித்து பாிதாபமாக உயிரிழந்தனர். கூலி வேலைக்கு செல்லும் தம்பதி உடல்வலியை போக்குவதற்காக வழக்கமாக மதுகுடிப்பது வழக்கம். அந்த வகையில் அதேபோல் 18ம்தேதி வேலையை முடித்துவிட்டு திரும்பிய தம்பதியர் உடல்வலியை போக்குவதற்காக இரவு சாராயம் வாங்கி குடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டில் படுத்திருந்த தம்பதிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே, உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் ஹரி(14), ராகவன்(13) கோகிலா (16) என்ற மூண்டு குழந்தைகளும் தற்போது அனாதைகளாக நின்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you