கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குறித்து இன்று (ஜூன் 21) நடைபோட சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமரச்சொல்லி சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார். கேள்வி நேரம் முடிவதற்குள் அதிமுகவினர் குற்றசாட்டுகளை அடுக்கினர். இதனையடுத்து அவை காவலர்களை வைத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து, அதிமுகவினரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.