2014ம் ஆண்டு ஐ.நா சபையில் பேசிய பிரதமர் மோடி யோகா குறித்தும், ஆசனங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விளக்கினார். மனம், உடல், சிந்தனை, செயல் ஆகியவற்றின் ஒற்றுமையை உண்டாக்கும் யோக கலையை அனைவரும் பயிற்சி செய்ய வேண்டும் என பேசி இருந்தார். மேலும் ஜூன் 21ம் தேதி யோகா தினத்தை அனுசரிக்க பரிந்துரை செய்தார். அவரது முன்மொழிவை 175 நாடுகள் ஆதரித்தன. இதன் விளைவாக ஜூன் 21, 2015 முதல் யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.