BREAKING: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

72பார்த்தது
BREAKING: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 28, சேலம் அரசு மருத்துவமனையில் 15, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 என மொத்தம் 50 பேர் பலியாகியுள்ளனர். அதே போல், இந்த நான்கு மருத்துவமனைகளிலும் தற்போது 115 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளி மாதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சாராய வியாபாரி சின்னதுரை உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி