விஷச் சாராய விவகாரம் - முக்கியப்புள்ளி கைது

63பார்த்தது
விஷச் சாராய விவகாரம் - முக்கியப்புள்ளி கைது
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி விநியோகம் செய்தவர் இந்த ஜோசப் ராஜா. இவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கருணாபுரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி