ஒல்லியாக இருந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

54பார்த்தது
ஒல்லியாக இருந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே வாடன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் இருசாகவுண்டர் மகள் திவ்யா (19). சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். இவர், ஒல்லியாக இருப்பதாக நினைத்து உடல் பருமனாக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மனமுடைந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என்று விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி