விஷச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

53பார்த்தது
விஷச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன், சின்னதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையில் கள்ளக்குறிச்சியின் கருணாபுரத்தில் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி