பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஆகியோர் ஹைதராபாத் விமான நிலையத்திற்குள் நடந்து சென்றனர். அப்போது, அங்கிருந்த மாற்றுத்திறனாளி ரசிகர், நாகர்ஜுனாவுடன் பேச முயன்றார். அதை பார்த்த பாதுகாவலர், அந்த ரசிகரை கீழே தள்ளிவிட்டார். இதனை கவனிக்காமல் நாகர்ஜுனா நடந்து சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைப் பார்த்த நாகர்ஜுனா, “இது என் கவனத்திற்கு வந்தது. நான் அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுப்பேன்” என தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.