சரமாரியாக வந்த கார்.. தடுக்க முயன்ற நபர் ஏற்றிக் கொலை

50பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று (ஜூன் 23) இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாக் சௌராஹா அருகே கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் வந்த பல கார்களை மோதியுள்ளார். அப்போது போலா திவாரி என்ற வழக்கறிஞர் அந்த காரை நிறுத்துவதற்காக காரின் முன் நின்றுள்ளார். அதனைப் பார்த்த ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அவரை இடித்து தூக்கிவிட்டுச் சென்றார். இந்த விபத்தில் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கிருந்து தப்ப முயன்ற கார் ஓட்டுநரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.