சென்னையில் காலையிலேயே கள்ளச்சாராய விற்பனை (வீடியோ)

73பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சோகமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் சென்னை தேனாம்பேட்டைப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் மதுவை, காலையிலேயே வாங்கி வந்து மறைவாக நின்று குடிமகன்கள் குடிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இவர்களைப் பார்க்கும்போது “திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்..” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருவதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி