மின்னல் தாக்கியதில் 3 பேர் பலி.. 7 பேர் காயம்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோயிலில் மின்னல் தாக்கியதில் பூசாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், அவர்களுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அங்கு கனமழை பெய்து வருவதால் மக்கள் கோயிலில் நின்றுள்ளனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல், வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி