-Group 1

கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்

கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இனி நோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கர்நாடகா பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளாவில் கொரோனா பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாட்டுகள் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.