ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாளிகள்!

81பார்த்தது
உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் இன்று (செப்., 15) ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஜாதி, மத வேறுபாடின்றி, வசதி படைத்தவர், ஏழை என்ற பாகுபாடின்றி, மலையாளிகள் அனைவரும் ஒருமனதாகக் கொண்டாடும் விழா ஓணம் ஆகும். அதிகாலையிலேயே குளித்து, சூரியனை வணங்கி, புத்தாடை அணிந்து ஓணக்கோலமிட்டு கொண்டாடுகின்றனர். ஓணம் பற்றி பல புராணக்கதைகள் மற்றும் வரலாற்று பதிவுகள் இருந்தாலும், ஓணம் இறுதியில் ஒரு அறுவடை திருவிழா என்று நம்பப்படுகிறது.

Image: keralatourism

தொடர்புடைய செய்தி