கார் மோதியதில் இளைஞர் மரணம் - ஆந்திர எம்பி மகள் கைது

53பார்த்தது
கார் மோதியதில் இளைஞர் மரணம் - ஆந்திர எம்பி மகள் கைது
தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெசன்ட் நகரில் பீடா மாதுரி தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து, கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாகனத்தை கண்டுபிடித்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பீடா மாதுரியை அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி